Monday 11 December 2017

மறு விஜயம்


யார் செய்த சதியோ  யாமறியோம் என்னுடைய கம்பியூட்டர் மினி  மற்றும் சாதாரண சைசு இரண்டுமே ஒரு சுப முகூர்த்த நாளில் லைட்னிங் ஸ்ட்ரைக் செய்துவிட  மொபைல் போனில் மட்டுமே பிளாக்குகளைப் படித்தேன் . அதில்  ஆட்டோ சஜஷன் வருவதால் நான் ஒன்று டைப் செய்தால் கன்னாபின்னா  என்றுவேறு     ஒன்று
 வருவதால் காமெண்ட் கூடப் போடுவதைத் தவிர்த்து வந்தேன் .

வேறு ஒன்று புதிது வாங்கலாமென்றால் என்   மூத்த மகன் என் இரண்டாவது மகன் திருமணத்திற்கு  இங்கு வரும்போது வாங்கித் தருகிறேன் . நீ பிளாக் எழுதாவிட்டால்  சுனாமி நில நடுக்கமெல்லாம் வராது என்று சொன்னதன் பேரில் பிளாக் எழுத வில்லை .
கமெண்ட் பக்கம் தலை வைத்துப் படுத்தாலும் தடா வாகிப் போனது.

எனவே  நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பொழுது தான் பிளாக் பக்கம் வருகிறேன் .
ஒரு வழியாக இரண்டாவது மகனின் திருமணமும் நவம்பர் 3௦ ம் தேதி நல்ல மழையாக இருந்தாலும் சிறப்பாக நடந்து முடிந்தது .
புது மாதிரியான லாப் டாப் .
external கீ போர்ட் இல்லாமல் மவுசு இல்லாமல் டைப் செய்வது கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.

பழக கொஞ்சம் டயம் பிடிக்கும் போல .
இனிமேல் தான்  பிளாக் எழுதணும்.
  

No comments:

Post a Comment