Thursday 16 June 2016

வரலாறு திரும்புகிறது


என் சின்ன மகன் வீட்டிற்கு வந்திருக்கிறோம்.
நேற்றுத் தான்  வந்தோம்.

அவனும் அவன் கூட வேலை பார்ப்பவரும் ஒரு வீடு எடுத்துத் தங்கி இருக்கிறார்கள்
 நேற்று மட்டும் லீவு போட்டான் .
 நேற்று இருவரும் சேர்ந்து சமைத்தோம் .
 அவ்வப்போது அம்மா உனக்கு இதெல்லாம் தெரியாது என்று சொல்லும் போதும் இப்படிச் செய்யாதே அப்படிச் செய்யாதே என்று திருத்தம் சொல்லும் போது கோபம் வரவில்லை .   .மாறாக சிரிப்புதான்  வந்தது .
வீட்டில் எங்களுடன் இருக்கும் போது சொல்வான் என்னம்மா முப்பது வருடமாக சமைக்கிறாய் ஒரு அஞ்சே நிமிஷத்தில் சமையலை முடிக்கும் வழி கண்டு புடிக்கத் தெரியலே நீயெல்லாம் என்னாத்தப்  படிச்சு என்ன புண்ணியம்  என்று ரொம்பவே கலாய்ப் பான்.மேனேஜ்மேண்ட் கான்செப்ட் சரியில்லை என்பான் .
 நானும் என் அம்மாவை இது மாதிரி வயதில் கலாய்த்திருக்கிறேன்.
எல்லாத்தையும் ஒரு பாத்திரத்தில  போட்டு அடுப்பில
வெச்சா அது  பாட்டுக்க  வெந்துடுது ".நாம அதுக்குன்னு தனியா EFFORT எதுவும் எடுக்கலியே  இதுக்குப் போய் அலட்டிக்கலாமா " ( அப்போது அந்தப் பாட்டு ரஜனி பாடுவது ரொம்பப் பிரபலம் ) "என்னம்மா பொல்லாத சமையல் "என்று பாடி  வேறு கலாய்ப்பேன் .


இன்று அவன் ஆபீஸ் போய்விட்டான் .

அடுப்பு ஆன் பண்ணவது புரியவில்லை ..

ஃ போன்  பண்ணிக் கேட்டேன் .

 இரண்டு மணிக்கொரு தரம் வாட்ஸ் அப்பில் மெசெஜு அனுப்புகிறான் ..ஒன்னும் பிரச்னை இல்லையேன்னு .

இரண்டு குழந்தைகளும் சிறுவர்களாக இருந்தபோது  வேலைக்காரர்கள் அல்லது பெரியவர்கள் இல்லாதபோதும்   கொஞ்சம் வளர்ந்த பின் சனிக்கிழமைகளிலும்   (எங்களுக்கு அரை நாள் வேலை மட்டுமே)அவர்கள் வீட்டில் தனியாக இருப்பார்கள்.
பக்கத்து வீட்டில் எதிர்த்த வீட்டில் எல்லாம் சொல்லி விட்டு ஆபீஸ் போயிருக்கிறோம்.. அவர்களும் படு  சூட்டிகை .
 யாருக்கும் கதவையே திறக்க மாட்டார்கள் .
வீட்டை விட்டும் வெளியே வரமாட்டார்கள்.
   . கணவருக்கு ஆபீஸ் மூணு கிலோ மீட்டர் தான் .
எனக்குத்தான் எட்டு கிலோ மீட்டர் .
மதியம் வீட்டுக்கு என் கணவர் வருவார் . 
நாங்கள் அடிக்கடி வீட்டிற்கு ஃ போன் பண்ணுவோம்.
அதையே இப்போது அவன் பண்ணுகிறான் .
 நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொள்கிறேன்.
 இதுதான் சரித்திரம் திரும்புகிறது என்பதோ ?

No comments:

Post a Comment