Sunday 1 May 2016

தமிழ் எழுத்துக்களில் நியுமராலஜி இல்லையா ?



 பொதுவாக டி .வி  பார்ப்பதில் அவ்வளவு இஷ்டம் இருப்பதில்லை .

  காமெடி சானல்கள்  மட்டுமே  பார்ப்பேன்

சில சமயம் தெலுகு இந்தி இவற்றில் உள்ள ஜோசியம்
எண் கணிதம், பரிகாரம்   
போன்றவற்றையும் பார்ப்பேன் .

  என்னதான் சொல்லுகிறார்கள்  என்று பார்ப்பதற்காக .
அதில் நம்பிக்கை இல்லை .

நியுமராலஜி என்பது எனக்குத் தெரிந்த  வரை எல்லா மாநிலங்களிலும் 

ஒருவரின் பெயரை இங்கிலீஷில் எழுதி அந்த ஆங்கில எழுத்துக்களுக்கு

  ஒரு மதிப்பு  கொடுக்கிறார்கள்  .

பின் அவற்றின் கூட்டுத் தொகையைக் குறித்துக் கொள்கிறார்கள்.

. பிறகு அவரின் பிறந்த தேதி மாதம் வருடம் 

இவைகளைக் கூட்டி  வரும்  எண்ணும் பேரின் எண்ணும் 

ஒத்துப் போகிறதா என்று பார்க்கிறார்கள்.

 ஜப்பானியர்களும் தங்களது பிறந்த தேதியை  

( ஜப்பானியர்களின் வருடங்கள் அந்த அரசர் அரியணை ஏறும் நாளிலிருந்து கணக்கிடப் படும் . அவர்  இறக்கும் வரை அந்த அரசர் பெயரின் காலமாகக் கருதப்பட்டு 1,2 என்று கணக்கிடப் படும்

ஆங்கில வருடத்திற்கு மாற்றுகிறார்கள் .

 அதன் பிறகு அப்படியே கூட்டப் பட்டு  

அதைப் பத்துக்குள்  நம்மளை மாதிரி சுருக்கி 

அதுக்கு அவர்கள் பலன் சொல்கிறார்கள்

(நீ இப்படித்தான் யார் பேச்சும் கேக்க மாட்டே , அதாகப் பட்டது சுய சிந்தனையில் தான் எதையும் செய்வாய் என்பதன் பொருள் .... )

  கிட்டத்தட்ட நம்ம ஊர் நுயுமராலஜிஸ்ட்கள்  சொல்ற

அதே வார்த்தைகள் !

அதே தொனி!

 ஆனா அவங்க அதோட நிறுத்திக் கிட்டாங்க.
 பேர் பக்கம் போய்  வெளாட்டு வெச்சுக்கல .

 சீனர்கள் லோ  ஷு கிரிட்( lo  shu  grid )என்ற சார்ட் உபயோகிக்கிறார்கள் .
இங்கேயும் பேர் மாத்தற  விவகாரம் கிடையாது .

  1 லிருந்து 9 வரை உள்ள எண்களை நிலம் நீர் உலோகம் மரம் நெருப்பு என்ற ஐந்து விஷயங்களுக்குள்  ( 5 elements ) அடக்கி விடுகிறார்கள்.
(0வுக்கு மதிப்பு கிடையாது போல ). 
உதாரணமாக ;எண்கள் 2&5  நிலம்
7&6 உலோகம்
இது மாதிரி
இந்த ஐந்தும் ஒரு மனிதனின் பிறந்த எண்ணில் கிட்டத்தட்ட 
சமமாக ( balanced )இருந்தால் நல்லதாம்

சிலருக்கு நிலம் aspect  பலமாக இருந்தால் என்ன பலன் ,
நீர் aspect பலமாக இருந்தால் என்ன பலன்  
என்றெல்லாம் சொல்கிறார்கள் .

தவிரவும் வழக்கமான 1 முதல் 9 வரையிலான எண்களுக்குரிய  பலன்களும் உண்டு .

 நாம தான் நம்ம பேரை  இங்கிலீஷில் கன்வெர்ட் பண்ணி  ......... அப்புறம் மாச்சிங்    பேர் மாத்தற  விவகாரமெல்லாம் 


என்னோட சந்தேகமெல்லாம் ஏன் பேரை எல்லாரும் இந்தியாவில் 
இங்கிலீஷில் கன்வெர்ட் பண்ணி அதுக்கு வேல்யு  பார்க்கிறார்கள்  என்பதுதான்.

 தமிழ் இந்தி தெலுங்கு போன்ற மொழியில் உள்ள எழுத்துக்களுக்கு வேல்யு   கிடையாதா ?
இல்ல தமிழ் தெலுங்கு இந்தி யில்  யாருமே பேர் எழுத மாட்டாங்களா ?
 அல்லது 247 எழுத்துக் களுக்கும் மதிப்பு எண் கொடுப்பது சிரமமா?

 புரியவில்லை .

யாராவது ஹிந்தி பெங்காலி போன்ற இந்திய மொழி எழுத்துக்களுக்கு எண் 

மதிப்பு( Numerical value ) கொடுத்து நியூமராலஜி சொல்கிறார்களா ?

தெரிந்தால் சொல்லவும் .

இல்லாவிட்டால் இந்தியாவிலேயே முதன் முறையாக
 தமிழ் நியுமரலாஜி என்று ஆரம்பித்து patent வாங்கி விடலாமே !



3 comments:

  1. நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான். எண்கணித ஜோதிடத்தில், ஆங்கில எழுத்துக்களின் எண்கூட்டுத்தொகையே முக்கிய இடம் வகிக்கிறது. (எல்லாமே ஒரு நம்பிக்கைதான்; வியாபாரம்)

    எனக்கு பழக்கமான ‘இளங்கோ புத்தக நிலையம்’ என்ற ஒரு புத்தகக்கடை திருச்சி மெயின்கார்டு கேட்டில் இருந்தது. 35 வருடங்களுக்கு முன்னர், அந்த கடையில் பண்டிட் சேதுராமன் எழுதிய ‘அதிர்ஷ்ட விஞ்ஞானம்’ என்ற எண் கணித ஜோதிட நூலிற்கு நல்ல டிமாண்ட். சொல்லி வைத்து வாங்கிச் செல்லுவார்கள். இந்த நூலும் ஆங்கில முறைப்படிதான் கணித்து சொன்னது. அப்போது இந்த நூலின் விலை 25 ரூபாய் என்று நினைக்கிறேன். இப்போது அந்த நூலின் விலை 500 ரூபாய் இருக்கும். இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்த நூலுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு. இப்போது மின்நூல் வடிவில் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  2. நல்ல கேள்வி...அருணா. அதானே பேட்டன்ட் வாங்கிவிடலாமே!

    உங்கள் எழுத்தில் இழையோடும் நகைச்சுவையை மிகவும் ரசிக்கின்றோம். கொஞ்சம் சுஜாதா எட்டிப்பார்க்கின்றார்.

    ReplyDelete
  3. அருணா...உங்கள் கேள்விக்கான பதிலும் அதிர்ஷ்ட விஞ்ஞான நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் ஆங்கிலத்தை நோக்கி திரும்புவதற்க்கு அந்த மொழியின் வலிமைக்கு ஒரு சான்று. எனவே ஒருவரின் பெயரை இங்கிலீஷில் எழுதி அந்த ஆங்கில எழுத்துக்களுக்கு ஒரு மதிப்பு கொடுக்கிறார்கள். .

    ReplyDelete