Thursday 1 October 2015

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -
தனி ஒரு மனிதனுக்குச் சுத்தமான காற்று இல்லையேல் ஜகத்தினை   நாம் அழிக்க வேண்டாம் அது தானே அழிந்து விடும் .

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு என்பது  ஒரு ஒய் திஸ் கொலவெறி ரேஞ்சுக்கு    சமீபத்திய நாட்களில் எல்லார் வாயிலும் பூந்து புறப்பட்டு வரும் பேச்சு .இது பற்றி எழுதித் தீர்த்த தாள்கள் பலப்பல .உலகத்தை குறை சொல்லன்னும் என்றால் நாமெல்லாம் தொண்டை கிழியப் பேசுவோமே  தவிர செயலில் என்றும் இறங்குவதில்லை . அதுதான் பெரிய ஆபத்தே .
சுற்றுச் சூழல் மாசைக்  குறைக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் இதுவரை  சில மாற்றங்கள் மற்றும்  ஏற்பாடுகள் செய்திருந்தாலும் அவைகள் எல்லாம் 1%கூட சுற்றுச் சூழலில் கணிசமான மாற்றத்தைக் கொண்டுவரவில்லை .
நம்பாவிட்டால் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை  -   குப்பை கொட்டும் இடத்தைச் சென்று பார்த்து வந்தால் புரியும் .

விளை நிலத்தை நாம் இரசாயன உரங்கள் போட்டு குட்டிச் சுவராக்கியத்தின் விளைவு  இன்று பல வித வியாதிகளும் நம் உடம்பில் வந்து வாடகை இன்றிக் குடி புகுந்துவிட்டன . .அடுத்த தெருவுக்குப் போகணும் என்றால் கூட வாகனம் தான் .1981 ல் கோவையில் நான் இருந்த போது சனிக்கிழமை இரவு என்றால் மக்கள் இரண்டாம் காட்சி  பார்த்து விட்டு பார்த்த சினிமாவினைப் பற்றி  விமரிசனம் பண்ணிக்கொண்டு  நடந்து தான்  வீட்டுக்கு வருவார்கள்  , அது எவ்வளவு தூரமானாலும்  சரி.
 இப்பொழுது யாருமே நடப்பதில்லை , சர்க்கரை வியாதி இரத்தக் கொதிப்பு போன்ற  வாழ்கை முறை சம்பந்தப்பட்ட வியாதிகளின் தலை நகரமாக இந்தியா ஆனது தான் கண்ட பலன் .நாம் சுவாசிக்கும் காற்று உண்ணும் உணவு வசிக்கும் இடம் எல்லாவற்றையும் ஓவர் டயம் வேலை பார்த்து  மாசு படுத்தி விட்டோம்.
குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பரம் காதில் நாராசமாக ஒலிக்கிறது என்று ஒருகாலத்தில்  (60 மற்றும் 70 களில்)கருதப்பட்டாலும் இப்போது யாரும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை.இது ஒரு வரவேற்க்கத்தக்க மாற்றமே .

அதுபோலவே இப்போதும் குவிந்து கிடக்கும் குப்பை மலைகளின் புகைப்படம் மற்றும் அதனால் விளையும் தீங்குகள் பற்றியும் தொலைக்காட்சி  வானொலி
  பேஸ் புக் மற்றும் செய்தித் தாள் போன்ற ஊடகங்கள் வாயிலாகவும் மக்களுக்குக் காண்பித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் .

தொழிற்சாலைகள் வெளிவிடும்  சல்பர் டை-ஆக்சைடு     , நைட்ரஜன்    ஆக்சைடு,அம்மோனியா  மற்றும் , வோலடைல் ஆர்கானிக்  காம்பௌண்ட்கள் போன்றவற்றை நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க விதிமுறைகளை கட்டாயம் தொழிற்சாலைகள்  பின்பற்றுமாறு சட்டம் செய்ய வேண்டும் .


வாகனங்களின் எண்ணிக்கை கூடக் கூட அவை வெளி விடும் அசுத்தக் காற்றும் அதிகமாகின்றது எனவே பொது வாகனங்கள் அதாவது public Transport வாகனங்களின் எண்ணிக்கையை அதிகம் செய்தால் தனி மனிதர்கள் உபயோகிக்கும் வாகனங்களும் குறையும்  இது சுற்றுச் சூழலில் ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் .
மக்கள் சைக்கிளை உபயோகப்படுத்துவதையும் நடந்து போவதற்கான  வசதிகளையும் கொண்ட  ரோடுகளை நிறைய உண்டாக்கினால்  வரும் நன்மைகள் பலப்பல..
ஒரு 40 வருடம் முன்பு சைக்கிளில் வரும் மாணவர்கள் மிகக் குறைவு .ஸ்கூட்டர் வேன், இவைகள் அறவே கிடையாது. பள்ளியோ கல்லூரியோ நடந்து வரும் மாணவர்களும் ஆசிரியர்களும் தான் அந்தக்  காலத்தில்  நடந்து தான்  வருவார்கள் .

ஒன்று நாம் பிளாஸ்டிக் இல்லாத வாழ்வை வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது  எறியும் பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சிசெய்ய சில மேலை நாடுகளை அப்படியே பின் பற்ற வேண்டும் .
உதாரணமாக சீனாவில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொடுத்தால் சப் வே டிக்கட்கள் கொடுக்கிறார்கள் .இதனால் மக்களும்பயனடைகிறார்கள் , பிளாஸ்டிக் பாட்டில்கள் தனியே சேகரிப்பதும் எளிதாக்கப் படுகிறது .பிளாஸ்டிக் பாட்டில்கள் மானாவாரியாக வெளியில் தூக்கி எறிவதும் தடுக்கப் படுகிறது.
. மேலும் விபரங்களுக்கு http://www.beijingrelocation.com/blog/in-beijing-you-can-buy-a-subway-ticket-with-empty-plastic-bottles/என்ற இணைப்பைச் சொடுக்கவும் .
 அதே போல் கோக கோலா பாட்டில்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சாமான்கள் ஏற்றிச்செல்ல உதவும்  மிதவைப்படகு கூட யு டியுபில் பார்த்தேன். எந்த நாடு  எந்த மொழி என்று யாமறியேன் பராபரமே  என்றாலும் . https://www.youtube.com/watch?v=mMGDudFMIqA  என்ற இணைப்பைச் சொடுக்கினால் எப்படிப் பண்ணலாம் என்ற விஷயம் புரிகிறது.
மீகாங்கில் கூட பிளாஸ்டிக் பாட்டில் களை உபயோகித்துச் செய்த படகின் வீடியோவினை https://www.youtube.com/watch?v=-WdqCRDCsU0
என்ற இணைப்பில் காணலாம்

நாமும் வீடுகளில் பாட்டில்களைத் தூக்கி எறியாமல் அவற்றை சிறிய சிறிய செடிகளை வைக்க உபயோகப் படுத்தி  சுவர்களில் தோட்டம் அமைக்கலாம். மேலதிக    விபரங்களுக்கு   என்கிற  இணைப்பைப்  பார்க்கவும் . 

காய்கறிகள் வாங்குவோர்களும்  காய்கறி களைத் தனித்   தனியே   வைக்கத்  துணியினால் ஆன  சிறிய சிறிய பைகளை  மட்டுமே உபயோகிக்க வேண்டும்  என்று சட்டம் கொண்டு வர வேண்டும் . கடைகளும் எப்படி பிளாஸ்டிக் பைகளுக்கு என்று தனியே காசு வாங்குகிறார்களோ அதுபோல துணிப்பைகளுக்கும் காசு வாங்க வேண்டும் .  .  பிளாஸ்டிக் பை கிடைக்காது என்ற நிலை வந்தால் தானாகவே துணிப்பைகளை மக்கள் உபயோகிக்க ஆரம்பிப்பார்கள் . ஆரம்பத்தில் ஹெல்மெட்டுக்கு வரும் விமரிசனங்கள்  போல  சொல்லப்போனால்  வழக்கு பதியப்பட்டு கோர்ட்டுக்குப்  போகும் நிலை கூட வரும்
ஆனாலும் தளராது அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனர்களும்  மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

அதேபோல  குழந்தைகளுக்கும் பெரியவர்களும் சாப்பாட்டு டப்பா மற்றும் வீட்டில் மளிகைப் பொருட்கள் வைக்கும் டப்பா  போன்ற வீட்டு    உபயோகப் பொருட்களில் பிளாஸ்டிக்கை   முடிந்த வரை  தவிர்த்து எவர்சில்வரில் வைத்துக் கொள்வதை ஊடகங்கள்  மூலம் மக்களிடையே பரப்ப வேண்டும் .

 சத்தமில்லாத உலகம்  சண்டையில்லா நாட்கள் போல   இரசாயன உரம் இல்லாத பயிர்கள் ,இரசாயனங்கள் கலவாத சுத்தீகரிக்கும் பொருட்கள் (  Home Cleaning products   )போன்றவற்றை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்
 முடிந்த வரை ஒவ்வொரு தனி மனிதனும் , விழிப்புணர்வு முகாம்களும் ஊடகங்களும் ஒன்றுபட்டுச் செய்தால்  நிச்சயம் நாம் சுற்றுச் சூழல் மாசைக் கட்டுப்படுத்தலாம் .
எல்லோரும் சேர்ந்து கூவினால் பொழுது விடிய சாத்தியக்  கூறு  நிச்சயம் உள்ளது.

உறுதி மொழி :
(1)இந்தப் படைப்பு  எனது சொந்தப் படைப்பே
(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும்மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது
(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்று உறுதி கூறுகிறேன் .


45 Ideas of How To Recycle Plastic Bottles    DesignRulz.com 45 Ideas of How To Recycle Plastic Bottles    DesignRulz.com

5 comments:

  1. ல்லோரும் சேர்ந்து கூவுவோம்
    அருமை சகோதரியாரே
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிறப்பான கட்டுரை
    வாழ்த்துகள்

    ReplyDelete
  3. சிறப்பான கட்டுரை...

    ReplyDelete