Sunday 11 August 2013

மனித மனம் -- ஒரு வியப்பின் எல்லை

 மனித மனம் -- ஒரு வியப்பின் எல்லை

 மன நல நிபுணர்கள் மனித மனத்தை எத்தனையோ  கோணங்களில் ஆராய்ந்து இருக்கிறார்கள்  ஆனால்  மனித மனத்தை  நான் பார்க்கும் கோணமே வேறு .

 நமக்கு முன் எத்தனையோ பேர் எத்தனையோ  தப்புகளைப் பண்ணியிருந்தாலும் திரும்ப திரும்ப அதே தப்புகளையே  மனிதன் செய்கிறான் .

சிட்  ஃ பண்டுகளில்  பணம் போட்டால் ஏமாறுவோம் என்பது தெரிந்தும்  ஏமாறும் மக்களும் குறையவில்லை  சிட்  ஃ பண்டுகளும்  குறையவில்லை .
 மக்களிடையே  படிப்பறிவு  அதிகமான போதிலும் சரி , எப்படியாகப்பட்ட  அறிவாளிகள்   நிதி மந்திரியாக வந்தாலும் சரி , இது சுத்தமாக மாறவே இல்லை ,
 குடி ,சிகரெட்  ,,பான்  போன்றவற்றால்  வாழ்க்கையைத் தொலைத்த  மனிதர்கள் பலர் என்று தெரிந்தும் ஒவ்வொரு வருடமும்  புது குடிகாரர்களும் சிகரெட் பான் போடுபவர்களும் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதுபோல் சினிமா மோகமும் அப்படியே . தனக்கு பிடித்த நடிகரின் படம் ஏதோ  காரணத்தால் பார்க்க முடியாமல் போய்  மன வருத்தத்திற்கு ஆளாவதும்  தற்கொலை வரை போவதும் இது போலவே தான் .
 வாழ்க்கையில்  இவற்றை விட முக்கியமானவைகள் எத்தனையோ உள்ளது என்பதை  படித்த நாமே  இப்படி செய்தால் என்ன சொல்வது?

No comments:

Post a Comment